search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா: விடையாற்றி உற்சவ நிகழ்ச்சியுடன் நிறைவு
    X

    காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா: விடையாற்றி உற்சவ நிகழ்ச்சியுடன் நிறைவு

    • அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.
    • அமுது படையல் மற்றும் புஷ்பபல்லக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    காரைக்கால் பாரதியார் வீதியில் காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாங்கனித்திருவிழா கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது.

    தொடர்ந்து திருக்கல்யாணம், பிச்சாண்டவர் வீதியுலா, மாங்கனி இறைப்பு, அமுது படையல் மற்றும் புஷ்பபல்லக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு விடையாற்றி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி கைலாசநாதர் கோவிலில் பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, பிரகாரப் புறப்பாடு நடந்தது. அதேபோல் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் வாரியத்தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×