என் மலர்
வழிபாடு

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை பல்லவ உற்சவம்
- பெருமாளுக்கு காப்பு கட்டி நடத்தப்படும் உற்சவங்களில் இதுவும் ஒன்று.
- 18-ந்தேதி அன்று உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதவிழா 8 நாட்கள் நடைபெறும். பெருமாளுக்கு காப்பு கட்டி நடத்தப்படும் உற்சவங்களில் இதுவும் ஒன்று. தற்போது தொடங்கியுள்ள இந்த உற்சவத்தில் நாளை பல்லவ உற்சவம் நடைபெற உள்ளது.
இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார். அங்கு பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடக்கும். அஸ்திரி மகாத்மிய புராணத்தை பெருமாள் முன் வாசிப்பார்கள்.
பெருமாள் எப்படி அவதரித்தார் என்கின்ற அவதாரப் பகுதி வாசிக்கும் பொழுது, பெருமாள் ஏராளமான அலங்காரங்களுடன் காட்சி தருவார். பெருமாள் புறப்பாடும் உண்டு.
வாய்ப்பு உள்ளவர்கள் ஒரு நாளாவது காஞ்சீபுரம் சென்று இந்த உற்சவத்தில் பங்கு கொண்டால் நன்மைகளைப் பெறுவார்கள். வருகிற 18-ந்தேதி அன்று உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.
Next Story






