search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பஞ்சாக்கை காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
    X

    திருப்பஞ்சாக்கை காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா

    • காளியம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
    • அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது.

    திருக்கடையூர் அருகே திருப்பஞ்சாக்கையில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி திருவிழாயையொட்டி கடந்த 2-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் காளியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதையடுத்து ஆற்றங்கரையில் இருந்து பால்குடம், அலகு காவடி, பறவை காவடிகளுடன் கரகம் புறப்பட்டு வாணவேடிக்கையுடன், மேளதாளம் முழங்க தோட்டம் அன்னப்பன்பேட்டை மெயின் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து காளியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் செம்பனார்கோவில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×