search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
    X

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

    • முடி காணிக்கை செலுத்தி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தொடர் விடுமுறை என்பதாலும் வழக்கத்தை காட்டிலும் நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    மாவிளக்கு எடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, தூத்துக்குடி, உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×