search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கொளத்தூர் புத்தகரம் ஸ்ரீதேவி கங்கையம்மன் கோவில் தீமிதி விழா ஆகஸ்டு 6-ந்தேதி நடக்கிறது
    X

    கொளத்தூர் புத்தகரம் ஸ்ரீதேவி கங்கையம்மன் கோவில் தீமிதி விழா ஆகஸ்டு 6-ந்தேதி நடக்கிறது

    • 7-ந்தேதி கங்கையம்மன் உற்சவர் திருவீதி உலா நடக்கிறது.
    • 8-ந்தேதி கூழ்வார்த்தல் பலி பூஜை, அம்மனுக்கு கும்பம் நடக்கிறது.

    சென்னை கொளத்தூர் புத்தகரம் அங்காளம்மன், கங்கையம்மன், நாகாத்தம்மன் மற்றும் சோமநாத ஈஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீதேவி கங்கையம்மன் ஆடி 3-ம் வாரம் தீ மிதி திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந்தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து 8-ந்தேதி மாலை 7 மணிக்கு கூழ்வார்த்தல் நடக்கிறது.

    இதையொட்டி வருகிற 31-ந்தேதி மாலை 6 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது. 1, 2-ந்தேதிகளில் காலை மகா யாகம், மாலையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 3-ந்தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிசேகம், ஆரத்தியும், மாலை பரிவார தேவதைகளுக்கு பரிவார ஹோமமும் நடக்கிறது.

    4-ந்தேதி காலை தாய் வீட்டு சீர், பூங்கரகம் ஊர்வலம், மாலை குமார மக்கள் சந்திப்பு, 5-ந்தேதி காலை விநாயகர் கோவிலில் இருந்து அம்மனுக்கு 108 பால்குடம் எடுத்து வந்து அபிசேகம், மாலை அக்னி சட்டி ஊர்வலம், அம்மன் வர்ணிப்பு, வாணவேடிக்கை போன்றவை நடக்கின்றன. 6-ந்தேதி காலையில் பூங்கரகம் ஊர்வலம், மாலை அக்னி மூட்டு நிகழ்வு, இரவு பூங்கரகம், தீ மிதித்தல் நடைபெறுகிறது.

    7-ந்தேதி மாலை கங்கையம்மன் உற்சவர் திருவீதி உலா, 8-ந்தேதி கூழ்வார்த்தல் பலி பூஜை, அம்மனுக்கு கும்பம், தெருக்கூத்து உள்ளிட்டவை நடக்கின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×