என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருப்பதியில் இலவச தரிசன பக்தர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்: தேவஸ்தானம்
- தற்போது திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
- திருமலையில் உள்ள இடைத்தரகர்களை முற்றிலுமாக ஒழிக்க திட்டம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தான வரவேற்புத்துறை, பறக்கும் படை துறை, காவல் துறை அதிகாரிகள் தலைமையில் திருமலையில் உள்ள அன்னமயபவனில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளை பக்தர்களிடம் கூடுதல் விலைக்கு விற்று, அதிகமாகப் பணம் சம்பாதிக்கும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
மேலும் சாமி தரிசனம் மற்றும் அறைகளுக்கான சிபாரிசு கடிதம் கொடுக்கும் பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். திருமலையில் உள்ள இடைத்தரகர்களை முற்றிலுமாக ஒழிக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
தற்போது திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இலவச தரிசன பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து சாமி தரிசனத்துக்கு அனுப்பி வைத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்