என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோவில் தெப்ப உற்சவம் 40 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது
- 40 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பம் உற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
- தெப்பம் 3 முறை வலம் வந்தது.
திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசத்தன்று தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நடைபெறாமல் இருந்து வந்தது.
40 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பம் உற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 25 அடி நீளமும், 25 அடி அகலத்துடன் பிரமாண்டமான முறையில் 150 மிதவைகள் கொண்ட தெப்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தெப்பத்தின் வெள்ளோட்டம் 14-ந்தேதி நடந்தது.
இதையடுத்து 40 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. முன்னதாக சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி தெப்பத்தில் எழுந்தருளினர்.
இதை தொடர்ந்து தெப்பம் 3 முறை வலம் வந்தது. இதில் செயல் அலுவலர் கவியரசு, தாசில்தார் ராஜ்குமார், மண்டல துணை தாசில்தார், ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ரேவதி, துணை சுகாதார இயக்குனர் விஜயகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்