என் மலர்
வழிபாடு

தாளப்பாக்கம் சென்னகேசவ சாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்
- பிரம்மோற்சவம் நாளை தொடங்கி ஜூலை 7-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
- இன்று மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராயச்சோட்டி அன்னமயா மாவட்டம் தாளப்பாக்கம் நகரில் உள்ள சென்னகேசவசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி இன்று (புதன்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை காலை கொடியேற்றம், அன்று இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, ஜூலை மாதம் 3-ந்தேதி இரவு கருட வாகன வீதிஉலா, 4-ந்தேதி மாலை திருக்கல்யாண உற்சவம், 5-ந்தேதி தேரோட்டம், 7-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா முடிகிறது.
பிரம்மோற்சவ விழா நாட்களில் வாகன வீதி உலாவுக்கு முன்னால் பக்தி பஜனை, கோலாட்டம் போன்ற கலாசார நிகழ்ச்சிகளை நடத்த தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து ஜூலை 8-ந்தேதி மாலை புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






