search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அம்மனுக்கு முதன்மையான நேர்த்திக்கடன்
    X

    அம்மனுக்கு முதன்மையான நேர்த்திக்கடன்

    • மேல்மலையனூரில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.
    • 7 வம்சா வழி பூசாரிகளின் குலதெய்வமாக ஜடா முனீஸ்வரன் விளங்குகிறார்.

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட 6 விதமான அசுத்த மலங்கள் சுரந்த வண்ணமாக உள்ளதாகவும் இந்த 6 அசுத்த மலங்களில் ஒவ்வொருநாளும் 3 வித அசுத்த மலங்களே களையப்படுவதாகவும், சுத்தம் செய்யப்படுகிறது.

    மீதமுள்ள உட்புற 3 மலங்களான ஆணவ மலம், கண்ம மலம், மாயை மலம் ஆகிய ஆணவம், இறுமாப்பு, தலைக்கணம், அகங்காரம் போன்ற தீய எண்ணங்களான குணங்கள் அங்காளம்மனை தியானம் செய்வதாலும், வழிபாடு செய்வதாலுமே சிறிது சிறிதாக உடலைவிட்டு விலகி தூய சிந்தனை ஏற்படுவதாகவும் அதற்காகவே தினந்தோறும் வீடுகளில் விளக்கேற்றி வைத்தே தியானம் செய்யப்படுவதாகவும் வருடத்திற்கு ஒருமுறையாகிலும் இக்குணங்கள் ஏற்படா வண்ணம் அறவே அழித்து ஒழிக்கவுமே இவற்றை தலைமையிட அங்காளம்மன் கோவிலிலே அழித்து ஒழிப்பதாகவே கருதப்படுகிறது.

    மனித இயக்க 5 செயல்களுக்கும் முக்கிய இடமாகிய ஐம்பொறி என்ற கண், காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகிய அனைத்தையும் தாங்கி நிற்கும் தலைமை இடமான தலையையே! அங்காளம்மன் தலைமையிட கோவிலிலே தலையில் தாங்கியுள்ள முடிகளையே அகற்றும் வண்ணம் தலையை மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

    அங்காளம்மன் திருக்கோவிலில் இருந்து தெளிவான ஞானத்தையும் அம்மன் பேரில் தூய அன்பையும் அவளின் அருளையும் தான் மொட்டைத் தலை தாங்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்திற்காகவே அங்காளம்மனுக்கு வேண்டுதல் பெயரில் மொட்டை அடிக்கப்படுவதாகவே வழக்கத்தில் உள்ளதற்கு உண்மை விளக்கமாகவே அமைகிறது.

    குலதெய்வ கோவில் ஜடாமுனீஸ்வரன்

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பூஜை செய்யும் 7 வம்சா வழி பூசாரிகளின் குலதெய்வமாக பெரிய ஏரிக்கரையின் கீழ் அமைந் துள்ள ஜடா முனீஸ்வரன் விளங்குகிறார். இந்த வம்சத்தில் பிறக்கும் குழந்தை களுக்கு இக்கோவிலில்தான் முடி காணிக்கை செலுத்தி காது குத்துவார்கள். ஆடி மாதம் வெகு விமரிசையாக இங்கு விழா நடத்துவார்கள்.

    Next Story
    ×