search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி ஞாயிறு, அன்னதானத்திற்கு உரிய தினம்...
    X

    ஆடி ஞாயிறு, அன்னதானத்திற்கு உரிய தினம்...

    • ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் விசேஷமானது.
    • கூழ் மற்றும் பதார்த்தங்களை வீட்டில் சமைக்க வேண்டும்.

    பொதுவாகவே ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் விசேஷமானது. ஆடி மாதம் ஞாயிற்று கிழமை அம்மன் வழிபாட்டை எப்படி முறையாக செய்து அம்மனின் அருள், ஆசியை முழுமையாக எப்படி பெறுவது? என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

    ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை மிகவும் விசேஷமானது. இந்த தினத்தில் நாம் அம்மனுக்கு கூழ் காய்ச்ச உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து, ஆடி ஞாயிறு, அன்னதானத்திற்கும் உரிய தினம்.

    கூழ் மற்றும் பதார்த்தங்களையும் வீட்டில் சமைக்க வேண்டும். முருங்கைக்கீரை, காராமணி குழம்பு, வாழைக்காய், கத்திரிக்காய், இவைகளோடு சில பேர் வீடுகளில் கொழுக்கட்டையும் செய்வார்கள். இவைகளை சமைத்து ஏழை எளிய மக்களுக்கு கூழுடன் சேர்ந்த பதார்த்தத்தை தானமாக அளிக்கும் பட்சத்தில், பல மடங்கு புண்ணியம் நம் குடும்பத்திற்கு சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    உங்களுக்கு எந்த வாரம் உகந்த வாரமாக இருக்கின்றதோ, அந்த ஞாயிறு கிழமைகளில் அம்மனை இவ்வாறு வழிபாடு செய்யலாம். இந்த ஞாயிறு தான், வழிபட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. 5 வாரங்களில் வரும் கிழமைகளில் உங்களுக்கு எந்த வாரம் உகந்ததாக உள்ளதோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

    Next Story
    ×