என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
வேளுக்குடி அங்காளபரமேஸ்வரி கோவிலில் அமாவாசை வழிபாடு
Byமாலை மலர்31 May 2022 6:02 AM GMT (Updated: 31 May 2022 6:02 AM GMT)
வேளுக்குடி அங்காளபரமேஸ்வரி கோவிலில் அமாவாசை வழிபாடு நடந்தது. இதில் தி்ரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி அம்மனுக்கு பால், மஞ்சள் பொடி, தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கோவில் திருக்குளத்தில் நீராடி பிதுர்தர்ப்பணங்களை செய்து பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
இதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர்கோவில், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், நீடாமங்கலம் வீரஆஞ்சநேயர், நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் உள்ள விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கோவில் திருக்குளத்தில் நீராடி பிதுர்தர்ப்பணங்களை செய்து பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
இதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர்கோவில், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், நீடாமங்கலம் வீரஆஞ்சநேயர், நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் உள்ள விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X