என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ கருடசேவை
    X
    ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ கருடசேவை

    ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ கருடசேவை

    ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் ஆழ்வார் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற 11-ந்தேதியும், தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி 12-ந்தேதியும் நடைபெறுகிறது.
    தாமிரபரணி நதிக்கரையோரம் சிறப்புபெற்ற நவதிருப்பதி கோவில்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி விழா எளிமையாக நடத்தப்பட்டது.இந்த ஆண்டிற்கான சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பொலிந்துநின்றபிரான் திருவீதி உலா வருதல் நடைபெற்று வருகிறது.  5-ஆம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு கருடசேவை விமரிசையாக நடந்தது.

    சுவாமி பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற 11-ந்தேதியும்(புதன்கிழமை), தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி 12-ந்தேதியும் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர், தக்கார், உபயதாரர்கள் மற்றும் ஊா்மக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×