என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
Byமாலை மலர்28 April 2022 3:07 AM GMT (Updated: 28 April 2022 4:17 AM GMT)
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டுக்கு முன்பு குவிந்தனர்.
பின்னர் காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமி சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சாமி அருளை பெற்றனர்.பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இதையும் படிக்கலாம்...‘ஹரே ராமா’, ‘ஹரே கிருஷ்ணா’ வார்த்தைகளை கொண்டு உருவான மகா மந்திரம்
இந்நிலையில் இன்று சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டுக்கு முன்பு குவிந்தனர்.
பின்னர் காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமிக்கு 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பின்னர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமி சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சாமி அருளை பெற்றனர்.பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இதையும் படிக்கலாம்...‘ஹரே ராமா’, ‘ஹரே கிருஷ்ணா’ வார்த்தைகளை கொண்டு உருவான மகா மந்திரம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X