என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று கருடசேவை உற்சவம்
    X
    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று கருடசேவை உற்சவம்

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று கருடசேவை உற்சவம்

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நாளான இன்று கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சென்னை திருவல்லிக்கேணியில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது.

    இங்கு சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2-ம் நாளான நேற்று காலை பெருமாள் சே‌ஷ வாகனத்தில் எழுந்தருளி பரமபதநாதன் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நாளான இன்று கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளி கோபுர வாசலில் தரிசனம் தந்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் காலை 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெற்றது. இன்று இரவு ஹம்சவாகன புறப்பாடு நடைபெற உள்ளது.

    Next Story
    ×