என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவிலில் 16-ந்தேதி லட்சார்ச்சனை மகோற்சவ விழா
Byமாலை மலர்11 April 2022 7:49 AM GMT (Updated: 11 April 2022 7:49 AM GMT)
சித்திரை மாதம் தொடக்கத்தில் வரும் சித்திரை நட்சத்திர தினமாக வருகிற 16-ந் தேதி அன்று வீரராகவ பெருமாள் கோவில் ஏகதின லட்சார்ச்சனை மகோத்சவம் நடைபெற இருக்கிறது.
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று ஆகும்.
சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரத்தில் வீரராகவர் பிரதிஷ்டை தினம் என்பதால் அன்று அவதார தினமாக கொண்டாப்படுகிறது.
கடந்த 2014 ஆண்டுக்கு பிறகு தற்போது சித்திரை மாதத்தில் இரண்டு முறை சித்திரை நட்சத்திரம் வருகிற 16-ந் தேதி, அடுத்த மாதம் 14-ந் தேதி வருகிறது.
இதில் சித்திரை மாதம் தொடக்கத்தில் வரும் சித்திரை நட்சத்திர தினமாக வருகிற 16-ந் தேதி அன்று வீரராகவ பெருமாள் கோவில் ஏகதின லட்சார்ச்சனை மகோத்சவம் நடைபெற இருக்கிறது.
லட்சார்ச்சனை காலை 5.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு திரு மஞ்சனம், மாலை உற்சவர் வீரராகவப்பெருமாள் ராஜவீதி புறப்பாடு நடைபெறும்.
சித்திரை மாத பிரமோற்சவ விழா மே மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் வெவ்வேறு வாகனத்தில் வீரராகவப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சித்திரை மாத இறுதியில் பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான வருகிற 14-ந் தேதி சித்திரை நட்சத்திரத்தில் காலை 10.30 மணிக்கு கோயில் குளத்தில் தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரத்தில் வீரராகவர் பிரதிஷ்டை தினம் என்பதால் அன்று அவதார தினமாக கொண்டாப்படுகிறது.
கடந்த 2014 ஆண்டுக்கு பிறகு தற்போது சித்திரை மாதத்தில் இரண்டு முறை சித்திரை நட்சத்திரம் வருகிற 16-ந் தேதி, அடுத்த மாதம் 14-ந் தேதி வருகிறது.
இதில் சித்திரை மாதம் தொடக்கத்தில் வரும் சித்திரை நட்சத்திர தினமாக வருகிற 16-ந் தேதி அன்று வீரராகவ பெருமாள் கோவில் ஏகதின லட்சார்ச்சனை மகோத்சவம் நடைபெற இருக்கிறது.
லட்சார்ச்சனை காலை 5.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு திரு மஞ்சனம், மாலை உற்சவர் வீரராகவப்பெருமாள் ராஜவீதி புறப்பாடு நடைபெறும்.
சித்திரை மாத பிரமோற்சவ விழா மே மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் வெவ்வேறு வாகனத்தில் வீரராகவப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சித்திரை மாத இறுதியில் பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான வருகிற 14-ந் தேதி சித்திரை நட்சத்திரத்தில் காலை 10.30 மணிக்கு கோயில் குளத்தில் தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X