என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பாலமுருகன் கோவிலில் காவடி உற்சவம்
Byமாலை மலர்5 April 2022 4:09 AM GMT (Updated: 5 April 2022 4:09 AM GMT)
50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி சுமந்தும், வேன் மற்றும் தேர்களை அலகு குத்தி இழுத்தும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்தும் ஊர்வலமாக சென்றனர்.
நெல்லிக்குப்பத்தை அடுத்த சுந்தரவாண்டி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் காவடி உற்சவ விழா நேற்று முன்தினம் மாலை விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை கெடில நதிக்கரையில் காவடி பூஜை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி சுமந்தும், வேன் மற்றும் தேர்களை அலகு குத்தி இழுத்தும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்தும் ஊர்வலமாக சென்றனர். அப்போது பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களை வழிநெடுக மஞ்சள் தண்ணீர் ஊற்றி வரவேற்று வழிபட்டனர்.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. பின்னர் சுவாமிக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை, மகா தீபராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு விநாயகர், பாலமுருகன் வீதி உலா நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு கோவிலில் இடும்பன் பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. பின்னர் சுவாமிக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை, மகா தீபராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு விநாயகர், பாலமுருகன் வீதி உலா நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு கோவிலில் இடும்பன் பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X