
அவர்களுக்கான குலுக்கல் கோவில் வளாகத்தில் நடந்தது. குலுக்கல் முடிவில் 1098 பிள்ளை தூக்கமும், 4 அம்மன் தூக்கமும், 25 உதிரி தூக்கமும் சேர்த்து இந்த ஆண்டு 1127 தூக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தூக்கத் தேரானது 282 முறை கோவிலை சுற்றி வலம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று கோவில் வளாகத்தில் நடந்த குலுக்கலில் தேர்வான தூக்கக்காரர்கள் மாலையில் சிகப்பு பச்சை வண்ண பட்டு உடுத்தி ஊர்வலமாக நடந்து சென்று நீராடினர். பின்னர் மூலக்கோவிலில் உள்ள கணபதிக்கு தேங்காய் உடைத்து மீண்டும் ஊர்வலமாக திருவிழா கோவில் வந்து கோவிலை சுற்றி 3 முறை விழுந்து நமஸ்காரம் செய்தனர். இவர்கள் தூக்க நேர்ச்சை நடைபெறும் 4-ந் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் கோவிலில் தங்கி இருந்து விரதம் இருக்க உள்ளனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமச்சந்திரன் நாயர், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, செயலாளர் மோகன்குமார் உள்பட பலர் செய்துள்ளனர்.