என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
கொல்லங்கோடு: 1098 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை வருகிற 4-ந்தேதி நிறைவேற்றப்படுகிறது
Byமாலை மலர்30 March 2022 3:43 AM GMT (Updated: 30 March 2022 3:43 AM GMT)
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் வருகிற 4-ந்தேதி 1098 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. இதற்கான பெயர் பதிவு கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் தூக்கத்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு வரலாற்று சிறப்பு மிக்க தூக்க நேர்ச்சை வருகிற 4-ந் தேதி நடக்கிறது. இதற்கான பெயர் பதிவு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அதன்படி, நேர்ச்சை நிறைவேற்ற இந்த ஆண்டு 1098 பச்சிளம் குழந்தைகளின் பெயர் பதிவு செய்யப்பட்டது.
அவர்களுக்கான குலுக்கல் கோவில் வளாகத்தில் நடந்தது. குலுக்கல் முடிவில் 1098 பிள்ளை தூக்கமும், 4 அம்மன் தூக்கமும், 25 உதிரி தூக்கமும் சேர்த்து இந்த ஆண்டு 1127 தூக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தூக்கத் தேரானது 282 முறை கோவிலை சுற்றி வலம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று கோவில் வளாகத்தில் நடந்த குலுக்கலில் தேர்வான தூக்கக்காரர்கள் மாலையில் சிகப்பு பச்சை வண்ண பட்டு உடுத்தி ஊர்வலமாக நடந்து சென்று நீராடினர். பின்னர் மூலக்கோவிலில் உள்ள கணபதிக்கு தேங்காய் உடைத்து மீண்டும் ஊர்வலமாக திருவிழா கோவில் வந்து கோவிலை சுற்றி 3 முறை விழுந்து நமஸ்காரம் செய்தனர். இவர்கள் தூக்க நேர்ச்சை நடைபெறும் 4-ந் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் கோவிலில் தங்கி இருந்து விரதம் இருக்க உள்ளனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமச்சந்திரன் நாயர், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, செயலாளர் மோகன்குமார் உள்பட பலர் செய்துள்ளனர்.
அவர்களுக்கான குலுக்கல் கோவில் வளாகத்தில் நடந்தது. குலுக்கல் முடிவில் 1098 பிள்ளை தூக்கமும், 4 அம்மன் தூக்கமும், 25 உதிரி தூக்கமும் சேர்த்து இந்த ஆண்டு 1127 தூக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தூக்கத் தேரானது 282 முறை கோவிலை சுற்றி வலம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று கோவில் வளாகத்தில் நடந்த குலுக்கலில் தேர்வான தூக்கக்காரர்கள் மாலையில் சிகப்பு பச்சை வண்ண பட்டு உடுத்தி ஊர்வலமாக நடந்து சென்று நீராடினர். பின்னர் மூலக்கோவிலில் உள்ள கணபதிக்கு தேங்காய் உடைத்து மீண்டும் ஊர்வலமாக திருவிழா கோவில் வந்து கோவிலை சுற்றி 3 முறை விழுந்து நமஸ்காரம் செய்தனர். இவர்கள் தூக்க நேர்ச்சை நடைபெறும் 4-ந் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் கோவிலில் தங்கி இருந்து விரதம் இருக்க உள்ளனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமச்சந்திரன் நாயர், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, செயலாளர் மோகன்குமார் உள்பட பலர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X