என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் 119 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை
Byமாலை மலர்30 March 2022 3:16 AM GMT (Updated: 30 March 2022 3:16 AM GMT)
இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் நாளை கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சியும், விழா நிறைவு நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பொங்கல் வழிபாடும் நடைபெறுகிறது.
குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி கிராமத்தில் நீலகேசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அம்மயிறக்க திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தூக்க நேர்ச்சை குழந்தைகளுக்கு ஆரோக்கியம், அறிவு, நீண்ட ஆயுள் உள்ளிட்டவைகளுக்காக நிறைவேற்றப்படுகிறது. அதன்படி நேற்று ஆண், பெண் என 119 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது.
2 வில்கள் கொண்ட தூக்க வண்டியில் 4 தூக்கக்காரர்கள் 4 குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி அம்மன் எழுந்தருளியிருக்கும் பச்சைப்பந்தலை சுற்றி வலம் வந்தனர். இதை பார்த்த பக்தர்கள் அம்மா சரணம்... தேவி சரணம்... என்ற நாம கோஷங்கள் எழுப்பினர். நண்பகலில் தொடங்கிய நிகழ்ச்சி மாலையில் நிறைவடைந்தது. தூக்க நேர்ச்சை நிகழ்ச்சியை காண குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவிலிருந்தும் திரளான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.
நாளை (வியாழக்கிழமை) கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சியும், விழா நிறைவு நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பொங்கல் வழிபாடும் நடைபெறுகிறது.
2 வில்கள் கொண்ட தூக்க வண்டியில் 4 தூக்கக்காரர்கள் 4 குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி அம்மன் எழுந்தருளியிருக்கும் பச்சைப்பந்தலை சுற்றி வலம் வந்தனர். இதை பார்த்த பக்தர்கள் அம்மா சரணம்... தேவி சரணம்... என்ற நாம கோஷங்கள் எழுப்பினர். நண்பகலில் தொடங்கிய நிகழ்ச்சி மாலையில் நிறைவடைந்தது. தூக்க நேர்ச்சை நிகழ்ச்சியை காண குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவிலிருந்தும் திரளான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.
நாளை (வியாழக்கிழமை) கமுகு எழுந்தருளல் நிகழ்ச்சியும், விழா நிறைவு நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பொங்கல் வழிபாடும் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X