
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
அதைத்தொடர்ந்து 30-ந்தேதி ரிஷப லக்னத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் இரவு பெரிய சேஷ வாகனச் சேவை, 31-ந்தேதி காலை சிறிய சேஷ வாகனச் சேவை, இரவு ஹம்ச வாகனச் சேவை.
அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி காலை சிம்ம வாகனச் சேவை, இரவு முத்துப்பந்தல் வாகனச் சேவை, 2-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகனச் சேவை, யுகாதி ஆஸ்தானம், இரவு சர்வ பூபால வாகனச் சேவை.
3-ந்தேதி காலை பல்லக்கு சேவை, இரவு கருட சேவை, 4-ந்தேதி காலை அனுமந்த வாகனச் சேவை, மாலை வசந்த உற்சவம், இரவு யானை வாகனச் சேவை, 5-ந்தேதி காலை சூரிய பிரபை வாகனச் சேவை, இரவு சந்திர பிரபை வாகனச் சேவை.
6-ந்தேதி காலை மரத்தேரோட்டம், இரவு குதிரை வாகனச் சேவை, 7-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு பிரம்மோற்சவ விழா கொடியிறக்கத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
மேற்கண்ட வாகனச் சேவை காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும் நடக்கிறது. வாகனங்களில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.