என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்
Byமாலை மலர்29 March 2022 4:51 AM GMT (Updated: 30 March 2022 5:02 AM GMT)
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 30-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 9 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது. அதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அங்குரார்ப்பணம், சேனாதிபதி உற்சவம், சிறப்புப்பூஜைகள் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து 30-ந்தேதி ரிஷப லக்னத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் இரவு பெரிய சேஷ வாகனச் சேவை, 31-ந்தேதி காலை சிறிய சேஷ வாகனச் சேவை, இரவு ஹம்ச வாகனச் சேவை.
அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி காலை சிம்ம வாகனச் சேவை, இரவு முத்துப்பந்தல் வாகனச் சேவை, 2-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகனச் சேவை, யுகாதி ஆஸ்தானம், இரவு சர்வ பூபால வாகனச் சேவை.
3-ந்தேதி காலை பல்லக்கு சேவை, இரவு கருட சேவை, 4-ந்தேதி காலை அனுமந்த வாகனச் சேவை, மாலை வசந்த உற்சவம், இரவு யானை வாகனச் சேவை, 5-ந்தேதி காலை சூரிய பிரபை வாகனச் சேவை, இரவு சந்திர பிரபை வாகனச் சேவை.
6-ந்தேதி காலை மரத்தேரோட்டம், இரவு குதிரை வாகனச் சேவை, 7-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு பிரம்மோற்சவ விழா கொடியிறக்கத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
மேற்கண்ட வாகனச் சேவை காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும் நடக்கிறது. வாகனங்களில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து 30-ந்தேதி ரிஷப லக்னத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் இரவு பெரிய சேஷ வாகனச் சேவை, 31-ந்தேதி காலை சிறிய சேஷ வாகனச் சேவை, இரவு ஹம்ச வாகனச் சேவை.
அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி காலை சிம்ம வாகனச் சேவை, இரவு முத்துப்பந்தல் வாகனச் சேவை, 2-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகனச் சேவை, யுகாதி ஆஸ்தானம், இரவு சர்வ பூபால வாகனச் சேவை.
3-ந்தேதி காலை பல்லக்கு சேவை, இரவு கருட சேவை, 4-ந்தேதி காலை அனுமந்த வாகனச் சேவை, மாலை வசந்த உற்சவம், இரவு யானை வாகனச் சேவை, 5-ந்தேதி காலை சூரிய பிரபை வாகனச் சேவை, இரவு சந்திர பிரபை வாகனச் சேவை.
6-ந்தேதி காலை மரத்தேரோட்டம், இரவு குதிரை வாகனச் சேவை, 7-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு பிரம்மோற்சவ விழா கொடியிறக்கத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
மேற்கண்ட வாகனச் சேவை காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும் நடக்கிறது. வாகனங்களில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X