search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
    X
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 30-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது.
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 30-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது. அதையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.

    அதையொட்டி அதிகாலை மூலவருக்கு சுப்ர பாதம், தோமால சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. காலை 6 மணியில் இருந்து காலை 9 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.

    கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து மூலவர் சன்னதி வரை உள்ள அனைத்துச் சன்னதிகள், தூண்கள், மாடங்கள், மேற்கூரை, தரை தளம், பலிபீடம், கொடிமரம் மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்தும் பித்தளை, தாமிர பாத்திரங்கள் ஆகியவற்றை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தனர்.

    அதன் பிறகு மஞ்சள், குங்குமம், சந்தனம், சீயக்காய், நாமக்கட்டி, பச்சைக்கற்பூரம், கிச்சிலி கட்டா, கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது ஆகிய சுகந்த திரவியத்தை கருவறை சுவர்கள், தூண்களில் பூசினர். இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    கோவில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், தலைமை அர்ச்சகர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×