என் மலர்

    வழிபாடு

    பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டதையும் வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தையும் படத்தில் காணலாம்.
    X
    பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டதையும் வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தையும் படத்தில் காணலாம்.

    அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்திபெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை முதல் சாமிக்கு 108 வகையான நறுமண பொருட்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு வழிபாடு நடந்தது.

    தொடர்ந்து சாமிக்கு 1008 ஆகம பூஜைகளும், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளுடன் வெள்ளிக் கவச அலங்கார சேவையும், மகா தீபாரதனையும் நடந்தது. இந்த சிறப்பு வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி உழவாரப்பணி குழு சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடந்தது. 108 கிலோ மிளகு, 1008 கிலோ மிளகாய் கொண்டு நடந்த இந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது.

    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.
    Next Story
    ×