search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தேய்பிறை அஷ்டமியையொட்டிபைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X
    தேய்பிறை அஷ்டமியையொட்டிபைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் சிம்மவாகன கால சம்ஹார பைரவருக்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் சிம்மவாகன கால சம்ஹார பைரவருக்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதைமுன்னிட்டு பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் அபிஷேக, ஆராதனை நடந்தது. நாகூரில் சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவிலில் பைரவர், வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில் உள்ள பைரவர்,, திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் அஷ்ட பைரவர், தகட்டூர் பைரவர் கோவில் உள்ளிட்ட பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    Next Story
    ×