
தொடர்ந்து காலபைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தா்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டன.
இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டையில் உள்ள தட்சிண காலபைரவர் கோவில், கந்திகுப்பம் காலபைரவர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து காலபைரவர் ேகாவில்களிலும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.