என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கருட வாகனத்தில் சாமி வீதி உலா
Byமாலை மலர்23 March 2022 3:23 AM GMT (Updated: 23 March 2022 3:23 AM GMT)
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கருட வாகனத்தில் சாமி எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் சாமி பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் கடந்த 20-ந் தேதி நடந்தது. தொடர்ந்து நடந்த புன்னைமர வாகனத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 5.30 மணிக்கு கருட சேவையும் கோபுர வாசல் தரிசனம் நடந்தது. இதில் கருட வாகனத்தில் சாமி எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை 5.30 மணிக்கு பல்லக்கு-நாச்சியார் திருக்கோலம், யோகநரசிம்மர் திருக்கோலம் நிகழ்ச்சி நடக்கிறது. அத்துடன், முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா வருகிற 26-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 5.45 மணிக்கு திருத்தேருக்கு எழுந்தருளல், காலை 7.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அன்று இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது. 28-ந் தேதி காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரியும் 29-ந் தேதி கொடியிறக்கமும் நடக்கிறது.
தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை 5.30 மணிக்கு பல்லக்கு-நாச்சியார் திருக்கோலம், யோகநரசிம்மர் திருக்கோலம் நிகழ்ச்சி நடக்கிறது. அத்துடன், முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா வருகிற 26-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 5.45 மணிக்கு திருத்தேருக்கு எழுந்தருளல், காலை 7.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அன்று இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது. 28-ந் தேதி காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரியும் 29-ந் தேதி கொடியிறக்கமும் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X