
புண்ணியசேனன் என்பவன், ‘சகல செல்வங்களுக்கும் அதிபதியாக வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்’ என்று அகத்தியரிடம் கேட்டான். அதற்கு அவர், திருவாப்புடையார் எனும் இத்தல ஈசனை நோக்கி தவம் புரியச் சொன்னார். அதன்படியே தவம் செய்த புண்ணியசேனனுக்கு, நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதனால் ஆணவம் கொண்ட அவன், ஒருவரையும் மதிக்காமல் நடந்துகொண்டான். இதனால் அவனது ஒரு கண் பார்வையை பறித்தார், ஈசன். இதையடுத்து தவறை நினைத்து வருந்திய அவனுக்கு மீண்டும் நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் குபேரன் என்ற பெயரையும் சிவபெருமான் சூட்டினார்.