என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை
Byமாலை மலர்24 Feb 2022 3:02 AM GMT (Updated: 24 Feb 2022 3:02 AM GMT)
தேய்பிறை அஷ்டமியையொட்டி பட்டிவீரன்பட்டி சுயம்புநாகேஸ்வரியம்மன் சன்னதியில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி சொர்ண ஆகர்ஷண பைரவர் அருள்பாலிக்கிறார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியின்போது சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்படுகிறது. அதன்படி பக்தர்களால் வழங்கப்பட்ட சந்தனம், மஞ்சள் திருமஞ்சனபொடி, பால், தேன் இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சொர்ண ஆகர்ஷண பைரவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டு சென்றனர்.
இதுபோல தேய்பிறை அஷ்டமியையொட்டி பட்டிவீரன்பட்டி சுயம்புநாகேஸ்வரியம்மன் சன்னதியில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் பைரவருக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், குங்குமம், விபூதி உள்பட 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சொர்ண ஆகர்ஷண பைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் சாவடி பஜார் காளியம்மன் கோவில் சன்னதி வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதுபோல தேய்பிறை அஷ்டமியையொட்டி பட்டிவீரன்பட்டி சுயம்புநாகேஸ்வரியம்மன் சன்னதியில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் பைரவருக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், குங்குமம், விபூதி உள்பட 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சொர்ண ஆகர்ஷண பைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் சாவடி பஜார் காளியம்மன் கோவில் சன்னதி வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X