என் மலர்
வழிபாடு

கோனியம்மன்
கோனியம்மன் கோவிலில் இன்று கொடியேற்று விழா
கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 2-ந்தேதி நடக்கிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு கொடியேற்றம், அக்னிச் சாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 2-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த 14-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அதன்பிறகு பூச்சாட்டுதல், நேற்று கிராம சாந்தி நடந்தது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு கொடியேற்றம், அக்னிச் சாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதன்படி வெண்மை நிற துணியில் சிம்ம வாகனம், சக்தியின் சின்னமான சூலாயுதம், மஞ்சள் சிகப்பு வண்ணங்களில் சிவாச்சாரியர்களால் வடிவமைக்கப்பட்டு, கோனியம்மன் பாதங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படும். பின்னர் கொடி மரத்தில் சிவாச்சாரியர்களால் கொடியேற்றப்படுகிறது.
இதையடுத்து கோவில் முகப்பில் அக்னிக்கம்பம் நடப்படுகிறது. பின்னர் கோனியம்மன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைகிறார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு கொடியேற்றம், அக்னிச் சாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதன்படி வெண்மை நிற துணியில் சிம்ம வாகனம், சக்தியின் சின்னமான சூலாயுதம், மஞ்சள் சிகப்பு வண்ணங்களில் சிவாச்சாரியர்களால் வடிவமைக்கப்பட்டு, கோனியம்மன் பாதங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படும். பின்னர் கொடி மரத்தில் சிவாச்சாரியர்களால் கொடியேற்றப்படுகிறது.
இதையடுத்து கோவில் முகப்பில் அக்னிக்கம்பம் நடப்படுகிறது. பின்னர் கோனியம்மன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைகிறார்.
Next Story