என் மலர்
வழிபாடு

கடலூர் பாடலீஸ்வரர் கோவில்
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா 1-ந் தேதி நடக்கிறது
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 11 மணிக்கு அறுபத்து மூவர் அபிஷேகமும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை சாயரட்சை வழிபாடும், இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை மூன்று கால பூஜைகளும், லிங்கோத்பவர் அபிஷேகமும் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து 2-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜையும், காலை 6 மணி முதல் 8 மணி வரை அதிகார நந்தி புறப்பாடும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து 2-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜையும், காலை 6 மணி முதல் 8 மணி வரை அதிகார நந்தி புறப்பாடும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Next Story