என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
கும்பகோணத்தில் மழை காரணமாக 63 நாயன்மார்கள் வீதி உலா ரத்து
Byமாலை மலர்12 Feb 2022 7:07 AM GMT (Updated: 12 Feb 2022 7:07 AM GMT)
கும்பகோணத்தில் பெய்த மழை காரணமாக 63 நாயன்மார்கள் வீதி உலா ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கும்பகோணத்தில் உள்ள மகாமகத்்தை தொடர்புடைய சைவ மற்றும் வைணவ கோவில்களில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி மக திருவிழா சிறப்பாக கொண்டப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசி மக விழா கடந்த 8-ந் தேதி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவன் கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் தினமும் காலை, மாலை ே்நரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மூர்க்கநாயனார், மெய்பொருள்நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்களும் இரட்டை வீதி உலாவாக கும்பேஸ்வரர் கோவில் மற்றும் நாகேஸ்வரர் கோவில் வீதிகளுக்கு செல்வது வழக்கம்.
ஆனால் நேற்று காலை பெய்த மழையின் காரணமாக 63 நாயன்மார்கள் வீதி உலா ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 63 நாயன்மார்களுக்கும் ஆதிகும்பேஸ்வரர் கோவில் வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, படிச்சட்டத்தில் வைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
விழாவில் தினமும் காலை, மாலை ே்நரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மூர்க்கநாயனார், மெய்பொருள்நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்களும் இரட்டை வீதி உலாவாக கும்பேஸ்வரர் கோவில் மற்றும் நாகேஸ்வரர் கோவில் வீதிகளுக்கு செல்வது வழக்கம்.
ஆனால் நேற்று காலை பெய்த மழையின் காரணமாக 63 நாயன்மார்கள் வீதி உலா ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 63 நாயன்மார்களுக்கும் ஆதிகும்பேஸ்வரர் கோவில் வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, படிச்சட்டத்தில் வைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X