என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருபட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பரிவேட்டை உற்சவம்
Byமாலை மலர்29 Jan 2022 6:31 AM GMT (Updated: 29 Jan 2022 6:31 AM GMT)
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக குதிரை வாகனம் இன்றி, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா சென்றார். அப்போது ஒவ்வொரு வீட்டு வாசலிலும், பெருமாளுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர்.
திருமங்கை நாட்டின் சிற்றரசனாக முடிசூட்டப்பட்ட திருமங்கையாழ்வார், ஆடல்மா என்கிற குதிரை மேல் ஏறிச்சென்று, சோழ மன்னனோடு போரிட்டு படைகளை விரட்டினாராம். இந்த புராண நிகழ்ச்சியை விளக்கும் வகையில் வெட்டும் குதிரை வாகனத்தில் வெங்கடேசப்பெருமாள் போலகம் பகுதியில் உள்ள அம்புத்திடலில் பரிவேட்டை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக குதிரை வாகனம் இன்றி, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா சென்றார். அப்போது ஒவ்வொரு வீட்டு வாசலிலும், பெருமாளுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர். வீதிஉலாவுக்கு பிறகு பெருமாள் கோவிலுக்கு திரும்பினார். தொடர்ந்து நேற்று இரவு அலர்மேலு மங்கைத்தாயார் சமேத வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் மற்றும் ஆண்டாளுடன் சேர்த்து வழிபாடாக சாற்றுமுறை ஆராதனைகள் நடைபெற்றன. கோவிலுக்குள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக குதிரை வாகனம் இன்றி, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா சென்றார். அப்போது ஒவ்வொரு வீட்டு வாசலிலும், பெருமாளுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர். வீதிஉலாவுக்கு பிறகு பெருமாள் கோவிலுக்கு திரும்பினார். தொடர்ந்து நேற்று இரவு அலர்மேலு மங்கைத்தாயார் சமேத வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் மற்றும் ஆண்டாளுடன் சேர்த்து வழிபாடாக சாற்றுமுறை ஆராதனைகள் நடைபெற்றன. கோவிலுக்குள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X