என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில்
    X
    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில்

    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தை அமாவாசை திருவிழா நாளை தொடங்குகிறது

    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தை அமாவாசை திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தை அமாவாசை திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தபாண்டிய நாடார் கொடியற்றி தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தினமும் இரவில் சுவாமி வெவ்வேறு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் சப்பரத்தில் எழுந்தருளல் காட்சி நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான தை அமாவாசை திருவிழா 31-ந் தேதி நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு சாமி உருகு பலகை தரிசனம், அபிஷேகம், மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத்திருக்கோல காட்சி, இரவு 10 மணிக்கு கற்பகபொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம், நடக்கிறது. பிப்ரவரி 1-ந் தேதி காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 8.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் அதனைத் தொடர்ந்து பச்சை சாத்தி சப்பரம் உலா வருதல், இரவு 10 மணிக்கு கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி நடைபெறுகிறது.

    2- ந் தேதி காலை தாமிரபரணி ஆற்றில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சாமி நீராடலும், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு சுவாமி ஆலிலை சயன மங்கள தரிசனம் நடைபெறுகிறது.
    Next Story
    ×