search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை பந்தல்கால் நாட்டு விழா நடந்த போது எடுத்த படம்.
    X
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை பந்தல்கால் நாட்டு விழா நடந்த போது எடுத்த படம்.

    மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை பந்தல் கால் நாட்டு விழா

    மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை பந்தல்கால் நாட்டு விழா பக்தர்களின்றி நடந்தது. கோவில் வாசல் அடைக்கப்பட்டிருந்தது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

    இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடைவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான மாசிக்கொடை விழா வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    மாசிக்கொடை விழாவையொட்டி பந்தல் கால் நாட்டு விழா நேற்று காலையில் நடந்தது.‌ அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், காலை 6 மணிக்கு நிறை புத்தரிசி வழிபாடு, 6.30 மணிக்கு தீபாராதனை, 7.45 மணிக்கு பந்தல் கால் நாட்டும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.

    இதில் கோவில் தந்திரி சங்கர நாராயணன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ஆறுமுக நயினார், இந்து முன்னணி கோட்ட செயலாளர் மிசா சோமன், ஒன்றிய துணைத்தலைவர் பிரதீப்குமார், ஹைந்தவ (இந்து) சேவா சங்க தலைவர் கந்தப்பன், பொதுச்செயலாளர் ரெத்ன பாண்டியன், செயலாளர் முருகன், பொருளாளர் சசீதரன் மற்றும் நிர்வாகிகள், பெரிய சக்கர தீவட்டிக்குழு தலைவர் முருகன், ஸ்ரீதேவி கலா மன்ற தலைவர் செல்லத்துரை, தேவி சேவா சங்க தலைவர் காளிப்பிள்ளை, மாவட்ட இந்து கோவில்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் ஸ்ரீபதி ராஜ், துணை அமைப்பாளர் வேல்தாஸ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து சமய மாநாடு திடலில் ஹைந்தவ (இந்து) சேவா சங்கம் சார்பில் 85-வது சமய மாநாடு பந்தல் கால் நாட்டு விழா நடந்தது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நேற்று வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று நடந்த பந்தல் கால் நாட்டும் விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் வாசல் அடைக்கப்பட்டிருந்தது. மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    Next Story
    ×