என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
நாளை அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்க தயாராகும் 1 லட்சத்து 8 வடை மாலை
Byமாலை மலர்1 Jan 2022 6:03 AM GMT (Updated: 1 Jan 2022 6:03 AM GMT)
நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க இதுவரை 3 ஆயிரம் பேர் இணைய வழியில் சாமியை தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். நாளை ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட உள்ளது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) அனுமன் ஜெயந்திகொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாளை காலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட உள்ளது.
இதற்காக வடைகள் தயாரிக்கும் பணி கடந்த 28-ந்தேதி தொடங்கியது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஆர்.கே. ரமேஷ் தலைமையிலான குழுவினர் சாமிக்கு சாத்துவதற்காக வடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவில் வடைகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்தது. இன்று வடைகளை மாலையாக கோர்க்கும் பணி தொடங்கியது.
இந்த வடைகளை தயாரிக்க 2 ஆயிரத்து 50 கிலோ உளுந்தம் பருப்பு மாவு, 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 120கிலோ உப்பு, 900 லிட்டர் நல்லெண்ணை ஆகியவை பயன்படுத்தப்பட்டன. 32 மடப்பள்ளி அர்ச்சகர்கள் 12 அடுப்புகளில் 3 நாட்கள் வடை தயாரிப்பு பணியை மேற்கொண்டனர்.
சென்னையைச் சேர்ந்த பூ அலங்கார குழுவினர் கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு நிறங்களால் ஆன 2 டன் எடை கொண்ட சாமந்தி பூக்களால் அலங்கரித்தனர்.
நாளை அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை அனுமன் ஜெயந்தியையொட்டி சாமிக்கு வடைமாலை சாத்துப்படியும், அதன்பின் நல்லெண்ணை, சிகைக்காய்த்தூள், பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், திரவியம் உள்ளிட்ட வைகளான அபிஷேகமும், சொர்ணாபிஷேகமும் நடைபெற உள்ளது. மதியம் 1 மணியளவில் தங்கக் கவசம் சாத்தப்படுகிறது.
இதற்காக வடைகள் தயாரிக்கும் பணி கடந்த 28-ந்தேதி தொடங்கியது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஆர்.கே. ரமேஷ் தலைமையிலான குழுவினர் சாமிக்கு சாத்துவதற்காக வடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவில் வடைகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்தது. இன்று வடைகளை மாலையாக கோர்க்கும் பணி தொடங்கியது.
இந்த வடைகளை தயாரிக்க 2 ஆயிரத்து 50 கிலோ உளுந்தம் பருப்பு மாவு, 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 120கிலோ உப்பு, 900 லிட்டர் நல்லெண்ணை ஆகியவை பயன்படுத்தப்பட்டன. 32 மடப்பள்ளி அர்ச்சகர்கள் 12 அடுப்புகளில் 3 நாட்கள் வடை தயாரிப்பு பணியை மேற்கொண்டனர்.
சென்னையைச் சேர்ந்த பூ அலங்கார குழுவினர் கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு நிறங்களால் ஆன 2 டன் எடை கொண்ட சாமந்தி பூக்களால் அலங்கரித்தனர்.
நாளை அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை அனுமன் ஜெயந்தியையொட்டி சாமிக்கு வடைமாலை சாத்துப்படியும், அதன்பின் நல்லெண்ணை, சிகைக்காய்த்தூள், பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், திரவியம் உள்ளிட்ட வைகளான அபிஷேகமும், சொர்ணாபிஷேகமும் நடைபெற உள்ளது. மதியம் 1 மணியளவில் தங்கக் கவசம் சாத்தப்படுகிறது.
ஆஞ்சநேயரை தரிசிக்க இதுவரை 3 ஆயிரம் பேர் இணைய வழியில் சாமியை தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இணைய வழியில் பதிவு செய்த 3000 பேர் ஒரு மணி நேரத்துக்கு 500 பேர் என அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நாமக்கல் கோட்டை சாலை பகுதி மூடப்பட்டு போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுகிறது.
இதையும் படிக்கலாம்...நாளை அனுமன் ஜெயந்தி... விரதம் இருந்தால் தீரும் துயரங்கள்...
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X