search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருத்தணி முருகன் கோவில்
    X
    திருத்தணி முருகன் கோவில்

    திருத்தணி முருகன் கோவிலில் படித்திருவிழா நாளை நடக்கிறது

    அனைவரும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பக்தர்களை சிறிய அளவில் குழுக்களாக பிரித்து அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
    திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந் தேதி திருப்படித் திருவிழாவும், அன்று நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    அதன்படி நாளை திருத்தணி முருகன் கோவிலில் படித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு கோவில் மலைப்பாதையில் உள்ள 365 படிகளிலும் கோவில் நிர்வாகம் சார்பில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை நடத்தப்படுகிறது.

    முருக பக்தர்கள் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு படிகள் வழியாக சென்று மூலவர் சுப்பிரமணிய சாமியை தரிசனம் செய்வார்கள்.

    இதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தங்கத்தேர் வீதியுலா நடைபெறுகிறது. இரவு 10 மணி வரை கோவில் நடைதிறந்து இருக்கும். மறுநாள் நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.

    1-ந் தேதி காலை 6:00 மணிக்கு, கோவில் நடை திறந்து, இரவு 9:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    படித்திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணி கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்று பரவலை அடுத்து பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அனைவரும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பக்தர்களை சிறிய அளவில் குழுக்களாக பிரித்து அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    விழாவையொட்டி மலைக்கோவில் மற்றும் மலைப்பாதை ஆகிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×