search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில்
    X
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில்

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்

    மார்கழி மாதத்தையொட்டி இன்று காலை ஏராளமான பக்தர்கள் வீரராகவர் கோவில் திரண்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து மூலவரை தரிசனம் செய்த பின் ஆண்டாள் சன்னதியில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி செல்வர்.

    இந்தநிலையில் இன்று மார்கழி மாதம் பிறந்து உள்ளது. இதை முன்னிட்டு வழக்கமாக நடை திறக்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் காலை 6 மணிக்கு நடைதிறக்கப்படும். தற்போது காலை 5 மணிக்கே நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து இன்று முதல் ஜனவரி மாதம் 12&ந் தேதி வரை காலை 5 மணி முதல் 6 மணி, 7 முதல் 8 மணி, 9 மணி முதல் 12 வரையிலும், மாலை 4.30 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

    இந்த நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மார்கழி மாதத்தையொட்டி இன்று காலை ஏராளமான பக்தர்கள் வீரராகவர் கோவில்  திரண்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர். பெண் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
    Next Story
    ×