என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி
Byமாலை மலர்15 Dec 2021 4:54 AM GMT (Updated: 15 Dec 2021 5:44 AM GMT)
அனுமதியுள்ள நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் மழையின் காரணமாகவும், நீரோடை பகுதிகளில் நீர்வரத்து அதிகம் இருந்ததாலும், பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதாலும், நீரோடைகளில் நீர்வரத்து குறைவாக இருப்பதாலும் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி நாளை (வியாழக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம், வனத்துறை, கோவில் நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் மழையின் காரணமாகவும், நீரோடை பகுதிகளில் நீர்வரத்து அதிகம் இருந்ததாலும், பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதாலும், நீரோடைகளில் நீர்வரத்து குறைவாக இருப்பதாலும் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி நாளை (வியாழக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம், வனத்துறை, கோவில் நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதியுள்ள நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணிந்து கோவிலுக்கு வரவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்...எந்த தெய்வத்திற்கு எப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்....
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X