search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்
    X
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடக்க உள்ளது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா 9 நாட்கள் நடக்க உள்ளது. அதையொட்டி இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை யாக சாலையில் புண்ணியாவதனம், ரக்‌ஷாபந்தனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் மற்றும் காரியக்கர்மங்கள் நடக்கிறது..

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை தங்கக் கொடிமரத்துக்கு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் தனூர் லக்னத்தில் காலை 9.45 மணியில் இருந்து காலை 10 மணிக்குள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின்போது தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி வாகன மண்டபத்தில் தரிசனம் தருகிறார்.

    நாளை இரவு சிறிய சேஷ வாகன சேவை, 1-ந்தேதி காலை பெரிய சேஷ வாகன சேவை, இரவு ஹம்ச வாகன சேவை, 2-ந்தேதி காலை முத்துப்பந்தல் வாகன சேவை, இரவு சிம்ம வாகன சேவை, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன சேவை, இரவு ஹனுமந்த வாகன சேவை, 4-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், மாலை வசந்த உற்சவம், இரவு யானை வாகன சேவை, 5-ந்தேதி காலை சர்வ பூபால வாகன சேவை, மாலை தங்கத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை, இரவு கருட வாகன சேவை.

    6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன சேவை, இரவு சந்திர பிரபை வாகன சேவை, 7-ந்தேதி மரத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை, இரவு குதிரை வாகன சேவை, 8-ந்தேதி வாகன மண்டபத்தில் பஞ்சமி தீர்த்தம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.

    இத்துடன் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
    Next Story
    ×