என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சாமிதோப்பு அரசம்பதியில் இன்று திருக்கல்யாண திருவிழா
Byமாலை மலர்26 Nov 2021 4:30 AM GMT (Updated: 26 Nov 2021 4:30 AM GMT)
குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் அரசம்பதியில் இன்று (26-ந்தேதி) மாலை திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது.
குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் அரசம்பதியில் கார்த்திகை மாத ஏடு வாசிப்பு கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (26-ந்தேதி) மாலை திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து இரவு வென்குதிரை வாகனத்தில் அய்யா பவனி வருகிறார். நாளை (27-ந்தேதி) மதியம் 3 மணிக்கு திருஏடு வாசிப்பும், மாலை 7 மணிக்கு கருட வாகனத்தில் அய்யா பவனி வருதலும் நடக்கிறது. தொடர்ந்து வருகிற 28-ந் தேதி காலை சுவாமி தோப்பில் இருந்து அரசம்பதிக்கு முத்திரி பதம் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.
அதன்பின் மதியம் 12 மணிக்கு உச்சி பணிவிடையும், அன்னதர்மமும் நடக்கிறது. மதியம் 3 மணிக்கு ஏடுவாசிப்பு தொடங்கி, 7 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அதன் பின்னர் அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதலும், 9 மணிக்கு தாலாட்டும், அதன்பின் அருளிசை வழிபாடும் நடக்கிறது. மறுநாள் அதிகாலை 3 மணிக்கு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அய்யாவின் அருள்பெற அரசம்பதி கோவில் நிர்வாகிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இரவு வென்குதிரை வாகனத்தில் அய்யா பவனி வருகிறார். நாளை (27-ந்தேதி) மதியம் 3 மணிக்கு திருஏடு வாசிப்பும், மாலை 7 மணிக்கு கருட வாகனத்தில் அய்யா பவனி வருதலும் நடக்கிறது. தொடர்ந்து வருகிற 28-ந் தேதி காலை சுவாமி தோப்பில் இருந்து அரசம்பதிக்கு முத்திரி பதம் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.
அதன்பின் மதியம் 12 மணிக்கு உச்சி பணிவிடையும், அன்னதர்மமும் நடக்கிறது. மதியம் 3 மணிக்கு ஏடுவாசிப்பு தொடங்கி, 7 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அதன் பின்னர் அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதலும், 9 மணிக்கு தாலாட்டும், அதன்பின் அருளிசை வழிபாடும் நடக்கிறது. மறுநாள் அதிகாலை 3 மணிக்கு கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அய்யாவின் அருள்பெற அரசம்பதி கோவில் நிர்வாகிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X