search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அபிஷேகம்
    X
    அபிஷேகம்

    சிவசூரியபெருமான் கோவிலில் மகாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

    சிவசூரியபெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக சூரிய புஷ்கரணியில் கார்த்திகை முதல் ஞாயிறு தீர்த்தவாரி நடந்தது.
    கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில் உஷாதேவி சாயாதேவி உடனாகிய சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. நவக்கிரக தலமான இங்கு கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று யாகம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து சிவசூரியபெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக சூரிய புஷ்கரணியில் கார்த்திகை முதல் ஞாயிறு தீர்த்தவாரி நடந்தது.

    இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×