search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் சண்டி யாகம்
    X
    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் சண்டி யாகம்

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் இன்று ருத்ர யாகம் தொடக்கம்

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மகோற்சவம் நடந்து வருகிறது. கடந்த 13-ந்தேதியில் இருந்து நடந்து வந்த காமாட்சி ஹோமம் (சண்டி யாகம்) நேற்று நிறைவடைந்தது.
    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மகோற்சவம் நடந்து வருகிறது. கடந்த 13-ந்தேதியில் இருந்து காமாட்சி ஹோமம் (சண்டி யாகம்) நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று கோவில் யாக சாலையில் காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை யாகம், மகா பூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகா அபிஷேகம், கலசாபிஷேகம், மாலை கலச ஸ்தாபனம், பூஜை, ஜபம், ஹோமம், நைவேத்தியம், ஆரத்தி ஆகியவை நடந்தது.

    அதில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர் ரெட்டிசேகர் மற்றும் அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஹோம மகோற்சவத்தின் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் (ருத்ர யாகம்), சிவன்-பார்வதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    Next Story
    ×