search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியபோது எடுத்த படம்.
    X
    ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியபோது எடுத்த படம்.

    ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

    கார்த்திகை மாதம் முதல் தை மாதம் மகரவிளக்கு பூஜை வரை குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள். அவ்வாறு வரும்போது தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கும் வந்து செல்வார்கள்.
    பிரசித்தி பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிந்து விரதத்தை பக்தர்கள் தொடங்குவார்கள். அப்போது புனித தலங்களில் அதிகாலையில் பூஜை செய்து மாலை அணிவார்கள்.

    தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் அதிகாலையில் பக்தர்கள் குளித்து அருவிக்கரையில் உள்ள விநாயகர் கோவில் முன்பு மாலை அணிவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் தென்காசியை சேர்ந்த மாரிமுத்து, சுப்புராஜ் உள்ளிட்ட பக்தர்கள் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் நேற்று காலை பூஜை செய்து சன்னிதானத்தில் வைத்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    ஆண்டுதோறும் தென்காசி வழியாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் குற்றாலம் வந்து அருவிகளில் குளித்து விட்டு செல்வார்கள். கார்த்திகை மாதம் முதல் தை மாதம் மகரவிளக்கு பூஜை வரை குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள். அவ்வாறு வரும்போது தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கும் வந்து செல்வார்கள். இதனால் இந்த பகுதியில் உள்ள கடைகளில் நல்ல வியாபாரம் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக குற்றாலத்தில் குளிப்பதற்கு அனுமதி இல்லாததால் குற்றாலம் வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துஉள்ளனர். எனவே குற்றாலம் அருவிகளில் தற்போது ஐயப்ப பக்தர்களை குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×