என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோவிலில் 2 நாட்களுக்கு பிறகு நடைபாதை திறப்பு
Byமாலை மலர்13 Nov 2021 7:51 AM GMT (Updated: 13 Nov 2021 7:51 AM GMT)
ஏழுமலையானுக்கு நடத்தப்படும் அனைத்து விதமான பூஜைகளில் பயன்படுத்தப்படும் மலர்களின் அடிப்படையில் சம்பங்கி மரம் ஏழுமலையான் கோவில் தல விருட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலவிருட்சமாக சம்பங்கி மரத்தை தேர்வு செய்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏழுமலையானுக்கு நடத்தப்படும் அனைத்து விதமான பூஜைகளில் பயன்படுத்தப்படும் மலர்களின் அடிப்படையில் சம்பங்கி மரம் ஏழுமலையான் கோவில் தல விருட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புராணங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர்ச் செடிகளை கொண்ட பூந்தோட்டம் திருமலையில் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஏழுமலையானுக்கு தினமும் நடத்தப்படும் பூஜைகளில் சம்பங்கி குறிப்பிடத்தக்க இடத்தை பெற்று வருகிறது.
பவிஷ்யோத்ர புராணம் 13-வது பாகம் 33 மற்றும் 34-வது ஸ்லோகங்களில் அப்போதைய அரசர் தொண்டைமான் சக்கரவர்த்தியிடம் ஏழுமலையான் தனக்கான கோவிலைக் கட்டும் போது கட்டுமானத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதியில் இருக்கும் சம்பங்கி தோட்டத்தை அகற்ற வேண்டாம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவிலில் உள்ள ஒரு பகுதி தற்போது சம்பங்கி பிரகாரம் என்று அழைக்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் சம்பங்கி மரம் ஏழுமலையானின் தலவிருட்சமாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதையில் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் மலையில் இருந்து மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதை கடந்த 2 நாட்களாக மூடப்பட்டது.
நேற்று இரவு முதல் மழை வெள்ளம் வடிய தொடங்கியது. இதையடுத்து நடைப்பாதையில் விழுந்த மண், மரங்கள் மற்றும் பாறைகள் அகற்றும் பணி நடந்தது. இன்று காலை முதல் நடைபாதையில் தரிசனத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதியில் நேற்று 28,851 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,705 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.96 கோடி உண்டியலில் காணிக்கை வசூலானது.
இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏழுமலையானுக்கு நடத்தப்படும் அனைத்து விதமான பூஜைகளில் பயன்படுத்தப்படும் மலர்களின் அடிப்படையில் சம்பங்கி மரம் ஏழுமலையான் கோவில் தல விருட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புராணங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர்ச் செடிகளை கொண்ட பூந்தோட்டம் திருமலையில் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஏழுமலையானுக்கு தினமும் நடத்தப்படும் பூஜைகளில் சம்பங்கி குறிப்பிடத்தக்க இடத்தை பெற்று வருகிறது.
பவிஷ்யோத்ர புராணம் 13-வது பாகம் 33 மற்றும் 34-வது ஸ்லோகங்களில் அப்போதைய அரசர் தொண்டைமான் சக்கரவர்த்தியிடம் ஏழுமலையான் தனக்கான கோவிலைக் கட்டும் போது கட்டுமானத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதியில் இருக்கும் சம்பங்கி தோட்டத்தை அகற்ற வேண்டாம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவிலில் உள்ள ஒரு பகுதி தற்போது சம்பங்கி பிரகாரம் என்று அழைக்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் சம்பங்கி மரம் ஏழுமலையானின் தலவிருட்சமாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதையில் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் மலையில் இருந்து மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதை கடந்த 2 நாட்களாக மூடப்பட்டது.
நேற்று இரவு முதல் மழை வெள்ளம் வடிய தொடங்கியது. இதையடுத்து நடைப்பாதையில் விழுந்த மண், மரங்கள் மற்றும் பாறைகள் அகற்றும் பணி நடந்தது. இன்று காலை முதல் நடைபாதையில் தரிசனத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதியில் நேற்று 28,851 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 13,705 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.96 கோடி உண்டியலில் காணிக்கை வசூலானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X