search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அய்யா வைகுண்டர்
    X
    அய்யா வைகுண்டர்

    வெள்ளையந்தோப்பு நாராயணசாமி கோவிலில் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது

    தென்தாமரைகுளம் அருகே உள்ள வெள்ளையன் தோப்பு நாராயணசாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) அய்யாவுக்கு திருக்கல்யாண விழா நடக்கிறது.
    தென்தாமரைகுளம் அருகே உள்ள வெள்ளையன் தோப்பு நாராயணசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த மாதம் 21- ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) அய்யாவுக்கு திருக்கல்யாண விழா நடக்கிறது. இதையொட்டி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு தொடக்கம், தொடர்ந்து அய்யாவின் திருக்கல்யாண நிகழ்ச்சி போன்றவை நடைபெறும்.

    இரவு 7 மணிக்கு பலவகையான மேளங்களுடன் அய்யா வாகனத்தில் பவனி வருதல், இரவு 9 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. விழாவின் இறுதி நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறும். விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, 11 மணிக்கு உச்சிப்படிப்பு, பிற்பகல் 2 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, தொடர்ந்து அய்யாவின் பட்டாபிஷேகம் நடைபெறும்.

    மாலை 5 மணிக்கு பட்டாபிஷேக பணிவிடை, மாலை 6 மணிக்கு வாகன பவனி, இரவு 9 மணிக்கு அன்னதானம், இரவு 10 மணிக்கு அய்யாவுக்கு பள்ளி அலங்கார பணிவிடை போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×