search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீபாவளியையொட்டி திறக்கப்பட்ட ஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டது.
    X
    தீபாவளியையொட்டி திறக்கப்பட்ட ஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டது.

    தீபாவளியையொட்டி திறக்கப்பட்ட ஹாசனாம்பா கோவில் நடை மூடப்பட்டது

    கொரோனா கட்டுப்பாடுகளுடன் கடந்த 9 நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தீபாவளியின் அடுத்த நாள் கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம்.
    ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவில் கருவறை தீபாவளியையொட்டி ஆண்டுக்கு ஒருமுறை அதாவது 9 நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். மேலும் ஹாசனாம்பா கோவிலில் நடை சாத்தப்படும் போது ஏற்றப்படும் தீபம் அடுத்தாண்டு திறக்கப்படும் வரை அணையாமல் இருக்கும். அத்துடன் சாமிக்கு படைக்கப்படும் பிரசாதம் கெடாமல் அப்படியே இருக்கும். இந்தாண்டு(2021) ஹாசனாம்பா கோவில் கடந்த மாதம்(அக்டோபர்) 28-ந்தேதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா முன்னிலையில் கோவிலின் நடை திறக்கப்பட்டது. அடுத்த நாளில்(29-ந்தேதி) இருந்து கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு நாளும் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் சாமி தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர். கொரோனா கட்டுப்பாடுகளுடன் கடந்த 9 நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தீபாவளியின் அடுத்த நாள் கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் கோவில் நடை திறக்கப்பட்டு 9 நாட்கள் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று ஹாசனாம்பா கோவில் நடை சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜை செய்து பாரம்பரிய சம்பிரதாயங்கள் செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டு பிரசாதம் படைக்கப்பட்டது. இதைதொடர்ந்து பிற்பகல் 1.05 மணி அளிவில் மந்திரி கோபாலய்யா ஹாசனாம்பா தேவி வீற்றிருக்கும் கருவறையின் கதவை மூடினார். பின்னர் கோவிலின் தலைமை அர்ச்சகர் கருவறையின் கதவுக்கு பூட்டு போட்டு சீல் வைப்பதன் மூலம் கோவிலின் நடை சாத்தப்பட்டது. இதில் பிரீத்தம் ஜே கவுடா எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச கவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுதொடர்பாக மந்திரி கோபாலய்யா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உண்டியல் காணிக்கை விவரம்

    ஹாசனாம்பா கோவிலில் முக்கிய பிரமுகர்கள் முதல் சாதாரண பக்தர்கள் வரை சிறப்பான முறையில் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. எந்தவொரு அசம்பாவிதம் இன்றி ஹாசனாம்பா கோவில் நடை திறந்து சாத்தப்பட்டது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நல்லாட்சி செய்வதன் மூலம் மாநில மக்கள் நல்வாழ்வு வாழ அருள் புரியவேண்டும் என்று ஹாசனாம்பா தேவியிடம் வேண்டினேன். அதேபோல் அனைத்தும் நடக்கும் என்று நம்புகிறேன். ஹாசனாம்பா கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு அதன் விவரம் 3 நாட்களில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×