என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சாய்பாபாவின் 103-வது மகா சமாதி தினம்: மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் பக்தர்கள் வழிபாடு
Byமாலை மலர்15 Oct 2021 7:49 AM GMT (Updated: 15 Oct 2021 7:49 AM GMT)
சாய் பாபாவின் 103-வது மகா சமாதி தினத்தையொட்டி அங்கு இன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சென்னை :
சீரடியில் உள்ள சாய் பாபா ஆலயத்துக்கு உலகம் முழுவதும் கோடான கோடி பக்தர்கள் இருக்கிறார்கள். சாய்பாபா 1918-ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார்.
இதையடுத்து ஆண்டு தோறும் விஜயதசமி தினத் தன்று சீரடி சாய்பாபாவின் மகா சமாதி தினத்தை அவரது பக்தர்கள் நடத்தி வருகிறார்கள்.
இன்று சாய்பாபாவின் 103-வது மகா சமாதி தினம் நடத்தப்பட்டது. இதையடுத்து இன்று அனைத்து சாய்பாபா ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரா தனைகள் நடத்தப்பட்டன.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவில் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. சாய் பாபாவின் 103-வது மகா சமாதி தினத்தை யொட்டி அங்கு இன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
துவாரகாமாயி ஆத்ம ஞானியர் மையம் சார்பில் ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவின் 103-வது ஆராதனை மற்றும் ஸ்ரீ சாயி குருசரித்திர நூல் வெளியீட்டு விழா தி.நகர் வாணி மஹாலில் இன்று நடந்தது.
விழாவில் சாய்பாபா பற்றிய பக்தி சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சாய்பாபா சிலையை பல்லக்கில் வைத்து பெண்கள் நடனமாடி ஊர்வலமாக எடுத்து வந்தனர். அன்பின் மேடையில் சாய்பாபா பற்றிய பாடலுக்கு மாணவிகள் பரதநாட்டியம் ஆடினார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாய்பாபா சரித்திர நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் முதல் பிரதியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட அதனை தொழில் அதிபர் வீரமணி, எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர் .
நிகழ்ச்சியில் முன்னாள் போலீஸ் ஏடிஜிபி.சேஷசாயி, எழுத்தாளர் ரமாசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சீரடியில் உள்ள சாய் பாபா ஆலயத்துக்கு உலகம் முழுவதும் கோடான கோடி பக்தர்கள் இருக்கிறார்கள். சாய்பாபா 1918-ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார்.
இதையடுத்து ஆண்டு தோறும் விஜயதசமி தினத் தன்று சீரடி சாய்பாபாவின் மகா சமாதி தினத்தை அவரது பக்தர்கள் நடத்தி வருகிறார்கள்.
இன்று சாய்பாபாவின் 103-வது மகா சமாதி தினம் நடத்தப்பட்டது. இதையடுத்து இன்று அனைத்து சாய்பாபா ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரா தனைகள் நடத்தப்பட்டன.
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவில் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. சாய் பாபாவின் 103-வது மகா சமாதி தினத்தை யொட்டி அங்கு இன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
துவாரகாமாயி ஆத்ம ஞானியர் மையம் சார்பில் ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவின் 103-வது ஆராதனை மற்றும் ஸ்ரீ சாயி குருசரித்திர நூல் வெளியீட்டு விழா தி.நகர் வாணி மஹாலில் இன்று நடந்தது.
விழாவில் சாய்பாபா பற்றிய பக்தி சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சாய்பாபா சிலையை பல்லக்கில் வைத்து பெண்கள் நடனமாடி ஊர்வலமாக எடுத்து வந்தனர். அன்பின் மேடையில் சாய்பாபா பற்றிய பாடலுக்கு மாணவிகள் பரதநாட்டியம் ஆடினார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாய்பாபா சரித்திர நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் முதல் பிரதியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட அதனை தொழில் அதிபர் வீரமணி, எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர் .
நிகழ்ச்சியில் முன்னாள் போலீஸ் ஏடிஜிபி.சேஷசாயி, எழுத்தாளர் ரமாசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X