search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கண்ணன்
    X
    கண்ணன்

    கண்ணனின் நாமங்கள்

    கிருஷ்ணனின் அவதாரம் பல சிறப்புகளை உள்ளடக்கியது. கண்ணனுக்கு ‘திரிபங்கி லலிதாகரன்’ என்ற பெயரும் உண்டு. கண்ணனின் நாமங்களை அறிந்து கொள்ளலாம்.
    * ஹரி - இயற்கையின் அதிபதி

    * கேசவன் - அளவிட முடியாதவன்

    * ஸ்ரீதரன் - லட்சுமியை மார்பில் கொண்டவன்

    * வாசுதேவன் - உயிர்கள் அனைத்திலும் வசிப்பவன்

    * விஷ்ணு - எங்கும் பரந்திருக்கும் இயல்பினன்

    * மாதவன் - பெரும் தவம் செய்பவன்

    * மதுசூதனன் - மது என்னும் அசுரனைக் கொன்றவன்

    * புண்டரீகாட்சன் - தாமரை போன்ற கண்களை உடையவன்

    * ஜனார்த்தனன் - தீயவர்களின் இதயத்தில் அச்சத்தை விளைவிப்பவன்

    * சாத்வதன் - சாத்வ குணத்தை விட்டு விலகாதவன்

    * விருபாட்சணன் - வேதங்கள், அவனைக் காண்பதற்கான கண்கள் என்பதால் இப்பெயர் வந்தது.

    * நாராயணன் - மனிதர்களின் புகலிடமாக இருப்பவன்

    * புருசோத்தமன் - ஆண்களில் மேன்மையானவன்

    * அனந்தன் - அழிவில்லாதவன்

    * கோவிந்தன் - பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன்

    * பத்மநாபன் - தொப்புளில் தாமரை மலரைக் கொண்டவன்

    * அச்சுதன் - எந்த ஒரு காரியத்திலும் இருந்து நழுவ நினைக்காதவர்
    Next Story
    ×