search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவபெருமான்
    X
    சிவபெருமான்

    கங்காவதாரண தாண்டவம்

    நடராஜரின் நடனங்கள், 108 தாண்டவங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் வித்தியாசமான ஒரு தாண்டவம்தான், இந்த ‘கங்காவதாரண தாண்டவம்.’
    சிவபெருமான் ஆடல்களுக்கு பெயர் பெற்றவர். அதனால்தான் அவரை நடனத்திற்கு அரசன் என்று குறிப்பிடும் வகையில், ‘நடராஜர்’ என்று அழைக்கிறோம். அவரது நடனங்கள், 108 தாண்டவங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் வித்தியாசமான ஒரு தாண்டவம்தான், இந்த ‘கங்காவதாரண தாண்டவம்.’

    கங்காவதரணம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இறுதியானதாகும். இதனை பூவரு கங்கை என்றும் அழைக்கின்றனர்.

    ஆகாயத்திலிருந்து கங்கை கீழே இறங்குவது போல இரு கைகளையும் பூமியில் ஊன்றி, உடலைப் பின்புறமாக வளைத்து,கால்களை இடுப்பு வரை நேரே தூக்கி ஆடுதல் கங்காவதரணம் என்று அழைக்கப்படுகிறது.
    Next Story
    ×