என் மலர்
ஆன்மிகம்

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம்
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பவித்ர மாலைகள் சமர்ப்பணம்
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் உற்சவர்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், இளநீர், தேன், பன்னீர் மற்றும் திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை சாஸ்திர சம்பிரதாயப்படி பவித்ர சமர்ப்பணம் நடந்தது. அதையொட்டி அதிகாலை சுப்ர பாத சேவை, தோமால சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை மற்றும் பல்வேறு காரியகர்மங்கள் நடந்தன. காலை 8.30 மணியில் இருந்து 10.30 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி பூஜை பொருட்களை கோவில் உள்ளேயே ஊர்வலமாக கொண்டு வந்து யாக சாலை அருகில் வைத்தனர்.
காலை 10.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரை உற்சவர்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், இளநீர், தேன், பன்னீர் மற்றும் திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பாலாலயத்தில் மூலவர்களுக்கும், கோவிலில் உள்ள துணைச் சன்னதிகளில் எழுந்தருளியிருக்கும் பரிவார மூர்த்திகளுக்கும், கொடிமரம், பலிபீடம், ஆஞ்சநேயருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
விழாவில் பெரியஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர்சுவாமிகள், கோவில் துணை அதிகாரி ராஜேந்திரடு, கோவில் பிரதான அர்ச்சகர் பி.சீனிவாசதீட்சிதலு, ஆகம ஆலோசகர் வேதாந்தம் விஷ்ணு பட்டாச்சாரியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலை 10.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரை உற்சவர்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், இளநீர், தேன், பன்னீர் மற்றும் திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பாலாலயத்தில் மூலவர்களுக்கும், கோவிலில் உள்ள துணைச் சன்னதிகளில் எழுந்தருளியிருக்கும் பரிவார மூர்த்திகளுக்கும், கொடிமரம், பலிபீடம், ஆஞ்சநேயருக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
விழாவில் பெரியஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர்சுவாமிகள், கோவில் துணை அதிகாரி ராஜேந்திரடு, கோவில் பிரதான அர்ச்சகர் பி.சீனிவாசதீட்சிதலு, ஆகம ஆலோசகர் வேதாந்தம் விஷ்ணு பட்டாச்சாரியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






