என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரட்டை புறப்பாடு உற்சவம்
Byமாலை மலர்18 Sep 2021 8:08 AM GMT (Updated: 18 Sep 2021 8:08 AM GMT)
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வேதங்கள் முழங்க இரட்டை புறப்பாடு உற்சவம் கோவில் வளாகத்தில் உள் புறப்பாடாக நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
விஷ்ணுவுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
108 திவ்யதேசங்களில் ஒன்றானதும், உலகப் புகழ் பெற்ற அத்திவரதர் கோவிலுமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் பிறப்பு, ஏகாதசி வெள்ளிக்கிழமையை ஒட்டி பெருமாள், தாயார் இரட்டை புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.
வரதராஜ பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பச்சை பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மல்லிகை, செண்பகப்பூ, பஞ்சவர்ணமலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி, மற்றும் பெருந்தேவி தாயார் உடன் காட்சியளித்தார்.
வேதங்கள் முழங்க இரட்டை புறப்பாடு உற்சவம் கோவில் வளாகத்தில் உள் புறப்பாடாக நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் கோவில்கதவு மூடிய நிலையில் இருந்தது. கோவிலுக்குள் சென்று பெருமாளை வணங்க முடியாததால் பக்தர்கள் கோபுர வாசலில் நின்று சுவாமியை வணங்கி சென்றனர்.
108 திவ்யதேசங்களில் ஒன்றானதும், உலகப் புகழ் பெற்ற அத்திவரதர் கோவிலுமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் பிறப்பு, ஏகாதசி வெள்ளிக்கிழமையை ஒட்டி பெருமாள், தாயார் இரட்டை புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.
வரதராஜ பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பச்சை பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மல்லிகை, செண்பகப்பூ, பஞ்சவர்ணமலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி, மற்றும் பெருந்தேவி தாயார் உடன் காட்சியளித்தார்.
வேதங்கள் முழங்க இரட்டை புறப்பாடு உற்சவம் கோவில் வளாகத்தில் உள் புறப்பாடாக நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் கோவில்கதவு மூடிய நிலையில் இருந்தது. கோவிலுக்குள் சென்று பெருமாளை வணங்க முடியாததால் பக்தர்கள் கோபுர வாசலில் நின்று சுவாமியை வணங்கி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X