search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெறிச்சோடிய திருச்செந்தூர் கடற்கரை
    X
    வெறிச்சோடிய திருச்செந்தூர் கடற்கரை

    திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு 3 நாட்கள் தடை: கடற்கரை வெறிச்சோடியது

    திருச்செந்தூர் கோவில் வளாகம், கடற்கரை போன்ற பகுதிகள் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், கோவிலில் வழக்கம் போல் நடைபெறும் அனைத்து கால பூஜைகளும் நடைபெற்றது.
    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முதல் 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் செல்ல முடியாத அளவுக்கு வடக்கு, தெற்கு டோல்கேட் பகுதியிலும் மற்றும் அனுக்கிரக விலாசம் பகுதியிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் மற்றும் கோவில் தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதன் காரணமாக கோவில் வளாகம், கடற்கரை போன்ற பகுதிகள் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், கோவிலில் வழக்கம் போல் நடைபெறும் அனைத்து கால பூஜைகளும் நடைபெற்றது.
    Next Story
    ×